என்னவள்
                                                                    - என் (னை பெற்றேடுத்த) அவள்
            



வெட்டியாய் ஊரை சுற்றி வெகுநேரம் கடந்து வந்த பின்
    கடுப்புடன் கடிந்துரைக்கும் அவள், சண்டையிட்ட
நான் சாப்பிடுவதற்காக  கடிந்துரைப்பதை நிறுத்திவிட்டு
   சமாதான படுத்துவாள் சாப்பிடாமல் நான் தூங்கிடக்கூடாதென்பதற்காக !!!

பண்டிகை நாளில் புத்தாடையில் கூட அவ்வளவாக தெரியாத
 அவள் அழகு , உடலூறு வந்த போதும் எங்கள் பசி போக்கிட
 நெருப்பில் வெந்து தனித்த பின் முகத்தில் இருக்கும் கரியை
  துடைக்கும் பொது தெரிய வரும்  ... !


தரமான இடத்தில் தலை வாழை இலையில் அறுசுவை
 படையலிட்டாலும் ,அடங்காத நாவை கூட
உப்பு உறைப்பின்றி அவரசர அவரசரமாக செய்யும்
 முள்ளங்கி  சாம்பாரிலும் உருளை பொரியலிலும் அடக்கிவிடுவாள் ... !

அப்பன் இருக்கும் பொது அவருடன் வந்த கஷ்டத்தையும் , அவர் விட்டு
 சென்ற பின் வந்த கஷ்டத்தையும் கண்ணீரில் கூட காட்டவில்லை அவள்,
நான் கவலையில் கரைத்துவிட கூடாதென்று , வெட்கமின்றி ஒத்துக்கொள்கிறேன் - நான் தோற்றுவிட்டேன் அவள் கல் நெஞ்சம் முன் !!!

வார்த்தைகள் போதாது அவளை வர்ணிக்க ,
 காகிதங்கள் போதாது அவளை பற்றி கட்டூரை எழுத ,
எந்த பொருளுடன் ஒப்பிட முடியாதவள்
எல்லா கடவுளை விட ஈடு இணையற்றவள் - என் அவள்  !!!

பட்டென்ன பட்டு  நவரத்தினங்கள் இளைத்து நூலாக்கி
 பவளங்கள் வைரங்கள் பதித்து தங்க ஊசியால்
நெய்து கொடுத்தாலும் ஈடாகுமா அது , அவளின்
 இத்துணை வருட அல்லல்களுக்கும் துன்பங்களுக்கும் முன்னாள் ...!


அப்பனின் ஆசியுடன் அண்ணனும் நானும்
 உன் இனிய பிறந்த நாளில் ,
இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்  ,
இன்னும் ஒரு பிறவி உன் மகனாக வேண்டுமென்று  ....






நான் சுற்றி திரிந்து வட்டமடித்த என் அலுவலகத்தில்
  இனி என் நினைவுகள் மட்டுமே சுற்றி திரிய போகிறது ...

தேனீர், உணவு இடைவேளைகளில் எனக்கும் சேர்த்து இடம்
  பிடித்த நண்பர்களே இனி அது எனக்கில்லை ...

எதிர் அணியிடம் நான் இருந்து விவாதித்து சண்டையிட்ட
  இடத்தில் இனி வேறு யாரோ ஒருவர் இருக்க போகிறார் ...

எப்பொழுதும் வேடிக்கையாக பேசும் என் வாடிக்கையாளர்
  இனி என்னை திட்டுவதற்கு எங்கே என தேட போகிறார் ...

விடாமுயற்சியையும் விவேகத்தையும் கற்று தந்த அலுவலகமே
   உன்னை விட்டு விடைப்பிரிய இருக்கிறேன் ...

எதற்கும் அசையாமல் அமைதியாய் இருந்து
வழி நடத்திய  ஆசான் என் அணி தலைவர் முதல் ...
அன்பாய் இருக்கும் அர்ச்சனா ,
அமைதியான ஆனந்த் ,
துரு துரு துர்கா ,
பாசமான பிரான்சிஸ் ,
புன்சிரிப்பு மாப்பிளை கோபி ,
கண்ணிலே படாத கல்யாண் ,
கனிவாய் பேசும் கலை,
கிராமத்து தங்கம் கிருபா ,
தலைமுடியுடன் விளையாடும் தங்கை மீனா ,
சேட்டைகள் செய்யும் சரவணா,
என் உடன்பிறவா சகோ சிந்து ,
மௌனமான தெய்வா அக்கா ,
மேலும் பாசமுள்ள சக்தி , சூர்யா , சரண்யா , பிரகாஷ் , டிட்டி ,ரேகா அக்கா...

 கடந்து வந்த இரண்டு வருட பயணத்தில் எல்லோரிடத்திலும் புன்னைகளையும் மகிழ்ச்சியையும் விட்டு வந்திருக்கிறேன் என நினைக்கிறன் எவரிடமேனும் மனக்கசப்பை விட்டு வந்திருந்தால் மன்னிக்கவும் ....

 நட்பு காட்டிய அனைவருக்கும் அன்பை தெரிவித்து விட்டேன் ..


 எங்கே என்னை விட்டு செல்கிறாய் என கேட்கும் என் இருக்கையை தவிர ...

இன்னும் சொல்ல மறந்த கதைகளுடன் விடை பெறுகிறேன் ..!
கொத்தடிமைகளாய் கொடுங்கோல் ஆட்சியின்
  சித்திரவதையில் சில நூறு ஆண்டுகள்
வீட்டிற்கு ஒருவரை பலி கொடுத்து
  விடு பட்டு விட்டோம் அவனிடமிருந்து கூட ...!

மனிதம் மறந்து மனசாட்சி இழந்து
   மரபில் மட்டும் மனிதனாய்
எப்போது விடுதலை இந்த
  சாதி எனும் மிருகத்திடமிருந்து ..!

பஞ்சு மரம் போல் மென்மையாக
  படர்ந்தாலும் பரவாயில்லை
ஆலமரம் போல் அடிவரை
  வேர் ஊன்றி இருக்கிறது சாதிய வெறி !

அந்த மரத்தை வெட்டவும் முடியாமல்
  அடியோடு சாய்க்கவும் உதவாத
எங்கள் பகுத்தறிவு பாட புத்தகத்தில்
  வெறும் பக்கங்களாகவே உள்ளது ..!

                                         




  
 சொந்த ஊரிலிருந்தும் சொந்தம்களிடமிருந்தும்
         சில  மைல் தூரம் !
தந்தை விட்டு சென்ற  சுமை, கடன்
        என மனதில் சில பாரம் !

அம்மாவோ  கை ருசியில் வடித்து கொட்ட
    அப்பனோ செல்லம் கொடுக்காதே என கிழித்து கொட்ட !
அக்காவிடம் அன்பு சண்டை இட்டு கொண்டே
    அண்ணனுடன் தலை வாழை விருந்து உண்டதை !
நினைத்து கொண்டே தினம் தினம் உண்போம் !
( உப்பு உரைப்பிலா உணவுகளை)

பள்ளி செல்லும் பச்சிளம் குழந்தை போல
   காலண்டரை பார்த்து கணக்கு போட்டு !
மூன்று மாதம் கழித்து வரும் பண்டிகைக்கு
    முன் கூட்டியே முன் ஏற்பாடு செய்துவிடுவோம் !
அந்த மாத செலவுகளுக்கு  பர்ஸை  தயார் செய்திருப்போம் !

பருவத்தில் பிரதி மாதம் புது உடை வாங்கியிருந்தாலும்
    பண்டிகையில் கூட ஓட்டை விழுந்த
பேண்டை ஒட்டு போட்டு அணிந்து
    தங்கை ஆசை பட்ட சுடிதாருக்காகவும்  !
தம்பி விரும்பி கேட்ட   ஜீன்ஸ்க்காகவும் பணம் சேர்ப்போம்  !


ஒன்றாய் கூடி இருந்த சித்தப்பன்-சித்தி
     மகள் வளையல் பூட்டு விழாவிற்கும் !
ஒரே வீட்டில் என்னையும் வளர்த்த
     பெரியப்பனின் மகன் கல்யாணத்திற்கும் !
வெறும் கையுடன்  செல்ல முடியாததால்  விடுப்பு இல்லை என பொய்யுரைப்போம் !

தீடிரென்று தடுக்கி விழுந்த அப்பத்தாளின்
   ஆஸ்பத்திரி செலவுகளுக்கு அங்கு இங்கு
ஓடியும் பணம் இல்லாத போது ஐநூறு  ஆயிரம்
     குடுத்து உதவும் பள்ளி நண்பனையும் !
பக்கத்துக்கு அறை அண்ணனையும்  நிலை மறந்து கட்டி அணைத்திருப்போம் !

தம்பி உருவிலோ தங்கை வயதிலோ
     யாரோ கடந்து செல்லும் போதோ !
உடல் நிலை சரியிலா பொழுதில்
     அம்மை அப்பனின் குரல் கேட்கும் போதோ !
கண்களில் கசியும் கண்ணீரை மறைத்து கொண்டு நடித்துத்திருப்போம் !

திங்களின் நிழல் கொடுக்கும் திண்ணை கொண்ட வாசலிலும்
     உயர் ரக மர வகையில் செய்த உல்லாச ஊஞ்சல் கொண்ட முற்றத்திலும்
வேப்ப மர காற்றிலும் வாழை மர தோப்பிலும் வாழ்ந்த நாம் !
     சிக்குண்ட சிலந்தியின் சின்ன வலையில் வாழும்   சிலரில்
ஒருவராக வாழ பழகியிருப்போம் !


அடிமையாக்கி வைத்திருந்தவன் ஆண்டு சென்ற
     பின்னும் அயல் நாட்டு கம்பெனிகளுக்கு
அடிமையாய் நாங்கள் இருப்பது  அவன்
     500  ரூபாய் சேர்த்து குடுக்கும் அப்ரைசல்க்கும்
அப்பா அம்மாவின் மருத்துவ இன்சூரன்ஸகளுக்கும் !

எங்கள் நகர வாழ்க்கை !!!!!
நரக வாழ்க்கை !!!!!!!!!!!!!!