ரூபாயின் மதிப்பு

by 02:18 0 comments


பன்னிரண்டு ஆண்டு நான் படித்த
பள்ளி படிப்பும் உணர்த்தவில்லை ..!
பதினெட்டு வயதுக்கு மேல் படித்த
கல்லூரி படிப்பும் உணர்த்தவில்லை ..!
சீராட்டி சிரமப்பட்டு என்னை வளர்த்த
தந்தையின் கஷ்டமும் உணர்த்தவில்லை ..!
அன்புடன் வளர்த்த அன்னையின் ஆபரணம்
அடகு வைக்க படும் போதும் உணரவில்லை ..!
22 ஆண்டுகள் உணராமலே இருந்துவிட்டேன் பணத்தின் அருமையை
என் முதல் சம்பளம் உணர்த்தியது ஒரு ரூபாயின் மதிப்பை ..!